For Daily Alerts
Just In
ஸ்டிரைக்: வங்கதேச துறைமுகத்தில் பணிகள் பாதிப்பு
சிட்டகாங்:
எதிர்க்கட்சி மாணவர் குழுக்கள் அழைப்பு விடுத்திருந்த ஒருநாள் அடையாளஸ்டிரைக்கால் வங்கதேசத்தின் முக்கிய துறைமுகமான சிட்டகாங் துறைமுகத்தில்பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
பாதுகாப்புப் படையினரால் எதிர்க்கட்சித் தலைவர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறிஅதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஸ்டிரைக்குக்கு அனைத்துக் கட்சி மாணவர்கள்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த சங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு உண்டு.
இந்த ஸ்டிரைக்கால் சிட்டகாங் துறைமுகத்தில் பணிகள் முழுமையாகப்பாதிக்கப்பட்டன. துறைமுக ஊழியர்கள் பணிக்கு வராததால் துறைமுகத்தில்நிறுத்தப்பட்டுள்ள 31 கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கப்படவில்லை.
மற்றபடி இந்த ஸ்டிரைக்கால் வேறு எந்த அசம்பாவிதச் சம்பவங்களும்நடைபெறவில்லை. சிட்டகாங் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
Story first published: Sunday, September 17, 2000, 5:30 [IST]