கனடாவுக்கு குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெல்லி:
கனடாவுக்குக் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை17,415. ஆனால், இந்த ஆண்டு இந்த எண்ணிகைக்கும் அதிகமானவர்கள்கனடாவுக்குச் சென்றுள்ளனர் என்று கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது.
தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளது.கனடாவில் இத் துறையில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. இது தவிர வேறு பலதுறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கனடாவை நோக்கி இந்தியர்கள்படையெடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சுமார் 2 லட்சத்து 25ஆயிரம் பேர் கனடாவுக்கு வருவார்கள் என்று அந் நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது.கனடாவுக்குக் குடியேரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள்இரண்டாம் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் தகவல் தொழில்நுட்பம், பத்திரிக்கைத் துறை, பொறியியல், நிதித் துறை,விற்பனைத் துறைகளில் பணியாற்ற இந்தியர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
இது தவிர பல் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நர்சுகளுக்கும்கனடாவில் நல்ல டிமாண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகமாக உள்ள வேலைவாய்ப்புக்கு ஏற்ப கனடா செல்ல விரும்பும் நபர்களைத்தேர்வு செய்ய தென் இந்தியாவில் புதிய அலுவலகங்களைத் திறக்க கனடா அரசுதிட்டமிட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications