ஹெராயின் கடத்திய ஜோடிப்புறா
மதுரை:
ஹெராயின் போதை பொருட்களை கடத்திய கைது செய்யப்பட்ட கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் கணவன் மனைவியர் பால்சாமி, க்ளாடிஸ் லில்லிஆகியோருக்கு மதுரை நீதிமன்றத்தில் தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 1998 ம் வருடம் மே மாதம் 7 ம் தேதி சென்னை போதைத் தடுப்புப்பிரிவு உதவி இயக்குநருக்கு வந்த ரகசியத்தகவலை அடுத்து, மதுரை வசந்தநகரில் உள்ள திருச்செந்தூர் மேன்ஷன் என்ற விடுதியில் உள்ள ஒரு அறையில் 2 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேச கடத்தல்காரர்கள் சிலர் ஹெராயினை வாங்குவதற்காக பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். கஸ்டம்ஸ் கண்காணிப்பாளரின் நேரடிப் பார்வையில் இந்தவிற்பனை நடத்தப்படுகிறது என்று தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து போதைத் தடுப்புப் பிரிவு போலீஸார் மாறுவேடத்தில் சென்று மேன்ஷனை கண்காணித்தனர். இவர்களுக்கு கிடைத்திருந்த தகவலில்குறிப்பிடப்பட்டிருந்த அறையில் தங்கியிருந்த மதுரை கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர் பால்சாமி 2 கிலோ ஹெராயினை கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்யத்தயாரானபோது போதைத் தடுப்புப்பிரிவு போலீஸார் பால்சாமியையும் சேர்த்து மற்றவர்களையும் சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது திருநெல்வேலி மத்திய கலால் துறை கண்காணிப்பாளரும், தனது மனைவியுமான க்ளாடிஸ் லில்லி உதவியுடன்நீண்டகாலமாக ஹெராயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று பால்சாமி உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து 2ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த க்ளாடிஸ்லில்லி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி, நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மதுரையில், போதை பொருள் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றங்கள் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் 15 ஆண்டுகள்சிறைத்தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தீர்ப்புக்குப்பின் பால்சாமி மத்திய சிறைச்சாலைக்கும், க்ளாடிஸ் லில்லி வேலூர் மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications