For Daily Alerts
Just In
டேபிள் டென்னிஸ்: சேதன் பபூர் தோல்வி
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர்பிரிவில் இந்தியாவின் சேதன் பபூர் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் சி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டின் பீட்டர்கோர்பெல்லை எதிர்த்து சேதன் பபூர் விளையாடினார்.
முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்ற அவர் அடுத்த மூன்று செட்டுகளில்17-21, 16-21, 14-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார். 36 நிமிடங்களில் இந்தஆட்டம் முடிவுற்றது.
இத்தோல்வியை அடுத்து டேபிள் டென்னிஸ் சேதன் பபூரின் பங்கேற்பு இத்துடன்முடிவு பெற்றது. ஏற்கெனவே ராமனுடன் சேர்ந்து சனிக்கிழமை ஆடிய இரட்டையர்ஆட்டத்திலும் பபூர் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, September 17, 2000, 5:30 [IST]