சென்னையில் சமூக நீதி மாநாடு
சென்னை:
சென்னையில் வரும் 24 ம் தேதி சமூக நீதி மாநாடு நடக்கிறது. இந்திய மனித உரிமைக் கட்சி இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதுகுறித்து இந்திய மனித உரிமைக் கட்சித் தலைவர் இளைய பெருமாள் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய மனிதஉரிமைக் கட்சி சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமத்துவபுரங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும்போது 50 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 6000 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களில் பணியாற்ற இடைநிலை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்இல்லாத போது, முதுநிலை பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு காலியிடங்களை நிரப்பலாம் என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதியும், கல்விஅமைச்சர்அன்பழகனும் அறிவித்தனர்.
ஆனால் காலியிடங்களை நிரப்ப அதிகாரிகள் இதுவரை முயற்சி எடுக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் மேல் நடவடிக்கைகள்எடுக்க வேண்டும். இந்த இரண்டு தீர்மானங்கள் குறித்தும் மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றார் இளையபெருமாள்.












Click it and Unblock the Notifications