தர்மபுரி பஸ் எரிப்பு: அதிமுக தொண்டர் விடுதலை
சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் கைதான அ.தி.மு.க.பிரமுகர் ரவீந்திரனை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழகத்தில் பல இடங்களில் அ.தி.மு.க வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி அருகே கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சை தீ வைத்துகொளுத்தினர்.
இதில் 3 மாணவிகள் இறந்தனர். இதுதொடர்பாக அ.தி.மு.க பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் ரவீந்திரன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அவர்சார்பில் வழக்கறிஞர் கோமதிநாயகம் ஆஜராகி வாதாடினார்.
நீதிபதிகள், பத்மநாபன், தங்கவேல் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர். வழக்கை விசாரித்த அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ரவீந்திரனைச் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்தனர்.
இந்த உத்தரவை மறுபரீசீலனை செய்யுமாறு விண்ணப்பம் அளிக்க கைதிக்கு உரிமை உள்ளது என்ற தகவல் ஆட்சியரின் உத்தரவில் இல்லை. எனவே இதுஅரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து ரவீந்திரனை உடனடியாக விடுவிக்குமாறும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications