மேற்கு வங்காளத்தில் வெள்ளத்துக்கு 64 பேர் பலி - 10 லட்சம் மக்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கல்ககத்தா:

மேற்குவங்கத்தில் ஏற்படுள்ள கடும் வெள்ளத்துக்கு இதுவரை 64 பேர் இறந்துள்ளனர்.10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்தமழை பெய்து வருகிறது.

இதனால், மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. லட்சக்கணக்கான ஏக்கரில்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 64 பேர் இறந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானமக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம்ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு விமானம் மூலம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கண்டி, பாரத்பூர், சாலர், பரூவான்,கார்கரான் மற்றும் முர்ஷிதாபாத் பகுதிகளில்தான் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகஉள்ளது.

அங்கு மீட்புப் பணியில் மிகுந்த சிரமத்துடன் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.மற்ற பகுதிகளுடனான சாலை மற்றும் ரயில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+