கண்ணூ

Subscribe to Oneindia Tamil

கோவை:

கண்ணூ

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகோபால் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது;

கேரள மாநிலம் கண்ணூரில் மின் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக மின் வாரியத் தலைவர் நம்பியார் மீது அமைச்சர் சர்மா புகார் கூறியுள்ளார். இந்த திட்டத்தில்நடந்த ஊழல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயின் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கேரள கம்யூனிஸ்ட் கட்சி கூறும் புகாரைப் போல் எவ்வித மறைமுகபேரமும் அமெரிக்காவுடன் நடக்கவில்லை.

ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு ரயில்வே இயன்ற அளவு உதவ முன்வரும். மேலும், இந்தமாநிலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

டில்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ரயில்வே ரிசர்வேஷன்களை இன்டர்நெட் லம் விரைவில் இணைக்கப்படும். இதற்கான பணிகள் நடந்துவருகிறது. கோவையிலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள இடப் பற்றாக்குறையைத் தவிர்க்க கூடுதல்பெட்டிகள் இணைக்கப்படும்.

திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை புதிய ரயில் அறிகப்படுத்தப்படுகிறது. இந்த இரவு ரயிலை கோவை வரை நீட்டிக்க முடியுமா என்பது குறித்துபரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு ராஜகோபால் பேட்டியின் போது கூறினார். பேட்டியின்போது தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் வர்த்தக அணித் தலைவர் சேகர்உடனிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+