மதுரை வன்முறை... கருத்துக் கூற மூப்பனார் மறுப்பு
சென்னை:
மதுரையில் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைச் சம்பவங்கள் குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தெரிவித்தார்.
சென்னையில் திங்கள் கிழமை மூப்பனார் அளித்த பேட்டி:
தேர்தலுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக தான் போராடுகிறோம். பிரச்னைகளை தீர்க்கா விட்டால்மீண்டும் போராடுவோம். தொண்டர்களை மட்டும் போராட்டத்திற்கு தூண்டி விடுகிறோம் என்பது தவறு. தலைவர்களும், தொண்டர்களும் சிறைக்குசெல்வோம். நாங்கள் அமைதியான முறையில் காமராஜர் வழியில் இந்த அறப்போராட்டத்தை நடத்துவோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியது சரியானதே. தெரியாமல் அவர் சொல்லமாட்டார்.
தமாகா முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது என்பதால் தான் திமுக எங்களை குறி வைத்து விமர்சிக்கிறது. தமாகாவுடன் ஒட்டும் இல்லைஉறவும் இல்லை என்று திமுக எந்த நோக்கத்தில் அறிவித்திருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. திமுக கூட்டணிக்கு திரும்பிப் போனால் தானேபிரச்னை.
அதிமுகவுடான எங்களது மதச்சார்பற்ற கூட்டணி தேர்தல் வரை தொருடமா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. நாங்கள் கூட்டணி பற்றிஇன்னும் பேசவில்லை. மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருக்க விரும்புகிறோம். ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜக மதவாதகட்சியாக இருக்கும் வரை நாங்கள் அதை எதிர்ப்போம்.
சென்னையில் பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா, மதுரை நடந்த வன்முறைச்சம்பவத்தால் பொதுச்சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. கருணாநிதி குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று தாக்கிப் பேசினார். ஆனால், மு.க.அழகிரிவிவகாரம் குடும்ப விஷயம். அதை விமர்சிக்க நான் தயாராக இல்லை.
சிதம்பரம் பாஜகவில் சேருவதாக வெளியான செய்திகளை நான் மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. திருச்சி லோக்சபா தொகுதியில் தமாகா சார்பில்சிதம்பரம் போட்டியிடுவாரா என்பதை தேர்தல் நேரத்தில் பார்ப்போம்.
ராமதாஸ் எங்கள் கூட்டணிக்கு வருவதாக சொல்லவில்லை. திமுக கூட்டணியில் நீடிப்பதாக தான் சொல்கிறார். ஜோதிபாசு மதிக்கத்தக்க மனிதர்.மேற்கு வங்கத்தின் தந்தையாக திகழ்பவர். அவருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதை கண்டிக்கிறேன் என்றார்மூப்பனார்.
முன்னதாக, திமுக வினர் யாரும் அழகிரியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று திமுக தலைமை கூறியது. இதையடுத்து மதுரையில்அழகிரியின் ஆதரவாளர்கள் பஸ் எரிப்பு, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பலர்கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications