ரூ. 100 கோடி மோசடி .. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சகோதரர் கைது
சென்னை:
சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 100 கோடி வரை மோசடி செய்ததாக நடிகர்ஒய்.ஜி.மகேந்திரன் சகோதரர் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் சினர்ஜி பைனான்ஸியல் எக்சேஞ்ச் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது.இந்த நிறுவனத்தை நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் சகோதரர் ராஜேந்திரா,வெங்கட்ராமன், முத்துச்சாமி, ரகுராமன் ஆகியோர் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாகவும், மூட அனுமதி தருமாறும் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் நிறுவனத்தின் சார்பில் மனு சய்யப்பட்டது. மனுவைவிசாரித்த நீதிபதி ஜெயசிம்ம பாபு விசாரணைக்கு உத்தரவிடடார்.
விசாரணையில் நிதி நிறுவனத்தில் மோசடி நடந்தது தெரிய வந்தது.வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட்டாக ரூ. 35 கோடி வரை இந்த நிறுவனம்வசூல் செய்துள்ளது. இதுதவிர பல கடன்களையும் பெற்றுள்ளது. மொத்தம் 9வங்கிகளிலிருந்து ரூ. 32 கோடி வரை கடன் பெற்றுள்ளது. ரூ. 100 கோடி வரை இப்படிபணம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஒய்.ஜி.ராஜேந்திரா உள்பட நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications