மைசூர் தசரா விழா நாளை துவங்குகிறது
மைசூர்:
உலகப் புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
நடிகர் ராஜ்குமார் கடந்த ஜூலை 30 ம் தேதி கடத்தப்பட்டுள்ளதால் இந்த வருடம் தசரா விழாவை மிக எளிமையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
சாமுண்டி மலையிலுள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் பூஜை தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகி எம்.என்.ஜோயிஸ் பூஜையைத் தொடங்கி வைக்கிறார்.
முதலில் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் நடிகர் ராஜ்குமாரை வைத்துத் தான் தசரா தொடக்கவிழாவை நடத்த வேண்டும் என்று தீர்மானித்திருந்தனர்.ஆனால் ராஜ்குமார் இன்னும் விடுவிக்கப்படாததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த தசரா விழா நவராத்திரி உற்சவம் என்றும் அழைக்கப்படும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்டயானை மீது வைக்கப்பட்டுள்ள தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கிபானிமண்டப மைதானத்தை அடையும்.
விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில், மாநில அரசு தசரா விழாவிற்காக ரூ 68 லட்ச ரூபாய்ஒதுக்கியுள்ளது. மேலும் மிக எளிமையாக இந்த விழாவைக் கொண்டாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக மின்சார வாரியம் மைசூர் முழுவதும்சிறப்பு மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications