தண்டனை தர கலைஞர் நீதிபதி அல்ல .. ப.சிதம்பரம்
மதுரை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுக்குச் சிறைத் தண்டனை தர கருணாநிதி ஒன்றும் நீதிபதி அல்ல என்று முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
த.மா.காவின் மறியல் போராட்டத்திற்காக சென்னையில் இருந்து காரைக்குடி வந்திருந்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அங்குநிருபர்களை சந்தித்தார். நிருபர்களின் கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்தார் சிதம்பரம்.
கேள்வி: நீங்கள் பா.ஜ.கவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே? உண்மையா?
பதில்: பத்திரிகை தர்மம் மெல்ல மெல்ல சாய்கிறது என்பதைத்தான் இந்த செய்திகள் காட்டுகின்றன. பாரதீய ஜனதாவில் கண்ணியமானவர்கள் பலர்இருக்கிறார்கள். கண்ணியம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இதற்கு மேல் இது தொடர்பாக பதில் சொல்ல எனது கண்ணியத்திற்கு அழகல்ல.
கேள்வி: சிறைநிரப்பும் போராட்டம் பற்றி?
பதில்: தலைமை எடுத்த முடிவை நிறைவேற்றுகிறோம்.
கேள்வி: பெட்ரோல்,டீஸல் விலை உயர்வு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரதீய ஜனதா அரசு நிதி, பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொண்டு ஓரளவு திறமையாக நிர்வாகம்செய்யமுடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகிவிட்டது. பிரதமர் உடல் நலக்குறைவும் இந்தச் சிக்கலுக்கு ஒருகாரணம். இதைப்பார்க்கும் பொழுது கவலையும், அச்சமும் ஏற்படுகிறது.
கேள்வி: போராட்டம் நடத்தினால் சிறை என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறாரே?
பதில்: கலைஞர் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சர். அவருக்கு யாரும் நீதிபதி பதவியைக் கொடுக்கவில்லை.
கேள்வி: தி.மு.க ஆட்சியில் உள்ள குறைபாடுகள் என்ன?
பதில்: தி.மு.கஆட்சியின் குறைபாடுகளை த.மா.கா போராட்ட அறிக்கைகளும் சிதம்பரம் போராட்ட தீர்மானமும் படம் பிடித்துக்காட்டுகின்றன. மின்வெட்டு, ரேஷன் பிரச்சனை, டெண்டர் முறையில் ஊழல் ஆகியவை குறித்து த.மா.கா கடுமையாக விமர்சித்து அறிக்கைவெளியிட்டுள்ளது.
இந்தப்பிரச்சனைகளை முன்வைத்து எதிர்கட்சி என்ற முறையில் அரசுக்கு எங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரியப்படுத்துகிறோம் என்றார்சிதம்பரம்.












Click it and Unblock the Notifications