கட்சி அலுவலகத்தை தாக்கினர் .. இலங்கை அதிபரின் தம்பி புகார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் பாதுகாவலர்கள் தனது கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக, சந்திரிகாவின் சகோதரரும், ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அனுரா பண்டாரநாயகா கூறியுள்ளார்.

கொழும்புவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அட்டாங்கலேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தை அதிபரின் பாதுகாப்புஅதிகாரிகள் திங்கள் கிழமையன்று தாக்கி நொறுக்கியுள்ளனர்,

இந்தத் தாக்குதலில் அக்டோபர் மாதம் 10-ம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த பிராச்சாரத்திற்கான மூலப்பொருட்களும் சேதமடைந்துள்ளன என பண்டாரநாயகே குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் சந்திரிகாதான் குற்றவாளி என கூறவும் நான் தயங்க மாட்டேன் என பண்டாரநாயகாகோபமாக தெரிவித்தார்.

இதற்கிடையே, பண்டாரநாயகாவின் தந்தை சாலமனின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள அடான்காலேயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலமனின்நினைவு நாள் செவ்வாய்க்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. சாலமன் 1959-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிபர் குமாரதுங்கா இந்த சடங்குகளில் பங்கு கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த சடங்குகள்பிரம்மாண்டமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வன்முறை அதிகரிப்பு:

இந்த நிலையில், தேர்தல் நெருங்க நெருங்க இலங்கை முமுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தேர்தலை கண்காணித்து வரும் ஐரோப்பியக் குழு இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+