அமாவாசையும்....வீரப்பனும்
சென்னை:
பயங்கர சாமி பக்தனான சந்தனக் கடத்தல் வீரப்பன் அமாவாசையை ஒட்டி கன்னட நடிகர் ராஜ்குமாரைவீரப்பன் விடுதலை செய்வான் என சிலர் கூறுகின்றனர்.
மூட நம்பிக்கை ஸ்பெஷலிஸ்டான வீரப்பனுக்கு அமாவாசை, பெளர்ணமி, பூனை சகுனம், நரி முகத்தை பார்த்துவேலையை தொடங்குவது, சில விலங்குகளின் சத்தம் கேட்டால் வேலையை நிறுத்திவிடுவதுபோன்றவற்றில் அதீத நம்பிக்கை உண்டு.
இதனால் புனித நாளாக கருதப்படும் மஹாளய அமாவாசை அன்று (புதன்கிழமை) பூாஜகளை முடித்துவிட்டுவியாழக்கிழமை ராஜ்குமாரை விடுவிப்பான் என தமிழ் பத்திரிக்கையான மாலைச்சுடர் கூறுகிறது.
இந்தப் பத்திரிக்கையில், வீரப்பன் பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் எப்போதுமே சிறப்பு பூஜைகள்செய்வான். அதன் பின்னே கைதிகளை விடுவிப்பான்.
வீரப்பன் மஹாளய அம்மாவாசை நாளான புதன்கிழமையன்று சிறப்பு பூஜைகள் செய்வான். மஹாளயஅமாவாசை தினம் துர்க்கை அம்மன் வரவைக் குறிப்பதாக கருதப்படுகிறது. அன்றுதான் நவராத்திரிபண்டிகையும் துவங்குகிறது. நவராத்திரி கர்நாடகாவில் தசாரா என்ற பெயரில் கொண்டாடப்டுகிறது.
வீரப்பன் துர்கை அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்து வருகிறான். இதுவே அவன்பணயக்திைகளை வியாழக்கிழமையன்று விடுவிப்பான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
வீர்ப்பனிடமிருநந்து விடுதலையாகி ராஜ்குமார் அரசு தூதர் கோபாலுடன் வருவார் என்ற நம்பிக்கைஉள்ளது என மாலைச்சுடர் கூறியுள்ளது.
வீரப்பன் கைதிகள் விடுதலை தவிர மேலும் சில நிபந்தனைகளை விடுத்துள்ளான். அவை யாருக்கும்தெரியப்படுத்தப்படவில்லை. அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளதாலும்வீரப்பன் ராஜ்குமாரை விடுவிப்பான் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.