விட்டுப் போன பயணியை வந்து கூட்டிச் சென்ற விமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பயணி வருவதற்குள் பறக்கத் துவங்கிய விமானம் மீண்டும் திரும்பி வந்து பயணியைஏற்றிக் கொண்டு பறந்தது.

சென்னையில் இருந்து கொழும்பிற்கு தினமும் பகல் 12.30 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் இயக்கப்படுகிறது. இதில் செல்ல இலங்கைப் பயணி ஒருவர் சென்னை விமானநிலையம் வந்தார்.

சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தின் காத்திருப்போர் அறைக்குசென்றார். அவர் அந்த அறைக்குள் நுழையும் நேரத்தில் இலங்கை விமானம் புறப்படஆயத்தமாகி ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பயணி திடுக்கிட்டார்.

அவரது லக்கேஜ் அனைத்தும் விமானத்தில் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல்விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான பைலட்டிற்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

விண்ணில் கிளம்பிய விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கியது. விட்டுச்சென்ற பயணியை ஏற்றிக் கொண்டு மீண்டும் பறந்தது.

இதனால் விமானம் 20 நிமிட தாமதத்திற்கு பின்னர் கொழும்பு சென்று சேரும் என்றுஅறிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+