ஷாஹின் ஏவுகணையை ஏவத் தயார்: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
விண்ணில் ஏவும் வகையில் நவீன ரக ஷாஹின் -2 ஏவுகணை தயார் நிலையில் இருப்பதாக பாகிஸ்தானின் மூத்தஅணு விஞ்ஞானி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஷாஹின் 2 என்ற நவீன ரக ஏவுகணையைப் பாகிஸ்தான் தயாரித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் மூத்த அணுவிஞ்ஞானி அப்துல் காதிர் கான் கூறுகையில், சுமார் 2500 கிலோமீட்டர் தூரம் வரைச் செல்லும் வகையில்ஷாஹின்-2 ஏவுகணையைத் தயாரித்துள்ளோம். இது விரைவில் விண்ணில் செலுத்திப் பரிசோதனை செய்யப்படும்.அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஏற்கனவே 1999 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதி ஷாஹின்-1 ஏவுகணையைத் தயாரித்து விண்ணில் செலுத்தினோம்.அது 750 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாக இருந்தது. அது தற்போது மேம்படுத்தப்பட்டு 2500கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் ஷாஹின் ஏவுகணைத் திட்டத்தின் கீழ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுவருகிறது என்றார் விஞ்ஞானி அப்துல் காதிர் கான்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications