யுனெஸ்கோ தீர்மானத்தில் கையெழுத்திடுகிறார் கருணாநிதி
சென்னை:
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியுள்ள"யுனெஸ்கோ அமைதிக்கான ஒப்பந்தம்-2000 என்ற தீர்மானத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, முதல்வர்கருணாநிதி, சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோர் திங்கள்கிழமை கையெழுத்திடுவார்கள்.
அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதே இந்த தீர்மானத்தின்குறிக்கோளாகும்.
சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் காந்தி ஜெயந்தி விழாவில் யுனெஸ்கோவின் கொள்கை விளக்கத்தீர்மானத்தில் இவர்கள் கையெழுத்திடுவார்கள்.
சென்னையில், கவர்னர் பாத்திமா பீவியும், மேயர் ஸ்டாலினும் தூத்துக்குடியில் முதல்வர் கருணாநிதியும்,மதுரையில் சடட்சபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனும் கையெழுத்திடுவார்கள். தமிழக அமைச்சர்களும்இதில் கையெழுத்திடுவார்கள்.
உலகம் முழுவதும் அமைதி, சமாதானம், வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவையே யுனெஸ்கோதீர்மானத்திந் முக்கிய அம்சம். 2000 மாவது ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் உலகம் முழுவதும்அமைதி நிலவச் செய்வதே யுனெஸ்கோவின் தீர்மானமாகும்.
2000 மாவது ஆண்டை சர்வதேச அமைதி வருடமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.