ஜெ.வுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் வருந்துவார் .. ஆர்.எம்.வீ.
சென்னை:
ஜெயலலிதாவுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் தன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள்நிச்சயம் வருந்துவார் என்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்சென்னையில் புதன் கிழமை தெரிவித்தார்.
சென்னையில் புதன் கிழமை அவர் அளித்த பேட்டி:
எம்ஜிஆர் கழகம் தொடங்கப்பட்டு வருகிற 17ம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. சென்னையில் அன்றைய தினம் நடைபெறும் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநில அளவில்சிறப்பு மாநாடு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் மக்களுக்கு பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது. எனவே விலையுயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
டீசல் விலை உயர்வால் மற்ற மாநிலங்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோதிலும், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று முதல்வர்கருணாநிதி அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை முதன் முதலில் தொடங்கி வைத்ததுஎம்ஜிஆர் கழகம் தான். அரசியலை விட்டு ஜெயலலிதாவை அப்புறப்படுத்தஅனைத்துக் கட்சிகளும் முன் வரவேண்டும். மூப்பனார் போன்றவர்கள் அத்தகையமுயற்சிக்கு துணிவோடு முன்வர வேண்டும்.
ஜெயலலிதா தலைமையில் நடந்த பெரியார் விழாவில் மூப்பனார் கலந்து கொண்டதுபெரிய தவறு. அந்த செயலை அவர் செய்திருக்கவே கூடாது. அதற்காக அவர் தன்வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலைமை நிச்சயம் வரும்.
மூப்பனார் ஜெயலலிதாவை சகித்துக் கொண்டதால் தமிழகத்தில் ஜெயலலிதாஎதிர்ப்புக்கு திமுக தான் சரியான கட்சி. எனவே திமுக தலைமையிலான அணியில்நாங்கள் தொடர்ந்து இடம் பெறுவோம். இதில் மாற்றமில்லை.
சாதிப் பெயரைச் சொல்லி தங்களுக்கு சுயலாபம் தேடிக் கொள்ள சாதிக் கட்சிகளை சிலஅரசியல்வாதிகள் உருவாக்கி வருகின்றனர். இது எதிர்கால சமுதாயத்திற்கு ஏற்பட்டபேராபத்து. இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் நாடு கெட்டுகுட்டிச் சுவராகி விடும்.
எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்திருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்முதலில் தங்களது அரசியல் எதிரி யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.அதன்பின்னர் எங்களுடன் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றார் வீரப்பன்.