த.மா.கா. கையெழுத்து இயக்கம் 4 நாட்கள் நடக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் புதன்கிழமை ற்றும்வியாழக்கிழமை நடத்தவிருந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸ்கட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
இரண்டு நாட்கள் நடத்தினால் போதாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத்தலைவர்கள் கட்சித் தலைவர் மூப்பனாருக்கு கோரிக்கை வைத்ததால், கூடுதலாக 2நாட்களுக்கு கையெழுத்து இயக்கத்தை நடத்த மூப்பனார் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு சட்டசபையிலும் 50,000 பேரிடம் கையெழுத்து வாங்க கட்சித் தலைமைமாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூடும் பொது இடங்களுக்குச்சென்று கையெழுத்தைப் பெறுமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications