திருமலை பிரம்மோற்சவம்
திருமலை:
திருமலாவில் புதன்கிழமை பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாள் விழா நடைபெறுகிறது. இன்று காலை மோகினி அவதார நிகழ்ச்சி நடந்தது. மாலைஊஞ்சல் சேவையும், இரவு கருட வாகனமும் அதன் பிறகு சர்வ சேவாவும் நடை பெறுகிறது.
காலை 9 மணி முதல் 11 மணி வரை எம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பெருமாள் மோகினிஅலங்காரத்தில் காட்சியளிப்பது காணக்கிடைத்தற்கரிய காட்சியாகும்.
மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஊஞசல் சேவை நடைபெறும். இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படுவார்.
இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார். கருடன் பெருமாளின் வாகனமாகும். காலையில் மோகினிஅவதாரத்தில் உலா வந்த பெருமாள், இரவில் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் புரிகிறார்.
சர்வ சேவா தரிசனம் காலை 6மணி முதல் மாலை 3.30 மணி வரைலும், மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 1 மணி வரையிலும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications