போராட்டத்தை தள்ளி வைத்தது அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி தீர்ப்பு காரணமாக அ.தி.மு.க. 13ம் தேதி நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 13ம் தேதி அதிமுக சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் கைதாகிவருகின்றனர்.
இதனால் இப்போராட்டத்தை தள்ளி வைத்துள்ளளார் ஜெயலலிதா. இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய மாவட்டச் செயலாளர்கள், போராட்டத்தில் பங்கேற்க வேண்டியகட்சியினரை திமுக அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருவதால், 13ம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications