For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் "சிக்னலுக்காக காத்திருக்கிறார் நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ள தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால், பேராசிரியர் கல்யாணி,சுகுமாறன் ஆகியோர் வீரப்பனின் சிக்னலுக்காக சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில்காத்துக் கொண்டுள்ளனர்.

ஐந்தாவது முறையாக காட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கோபாலுடன்,நெடுமாறன் தலைமையிலான புதிய தூதுக் குழு சென்றுள்ளது.செவ்வாய்க்கிழமைமாலை இவர்கள் காட்டுக்குச் சென்றனர். ஏற்கனவே அக்டோபர் 9-ம் தேதியகாட்டுக்குச் சென்று விட்ட கோபாலுடன் அவர்கள் சேர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜிடம் கேட்டபோது, வீரப்பனிடமிருந்து"விசா இன்னும் வரவில்லை. அது கிடைத்ததும் அனைவருக்கும் காட்டுக்குள்பயணமாவர்.

புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை காலைக்குள் காட்டுக்குள் நுழையஅனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X