தடா கைதிகளை விடுவித்தால் ராஜ்குமாரை வீரப்பன் கட்டாயம் விடுவிப்பானா?
டெல்லி:
தடா கைதிகளை விடுவித்தால் ராஜ்குமாரை வீரப்பன் விட்டுவிடுவான் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது எனகர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மைசூரில் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகள் விடுதலை குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது.புதன்கிழமை விசாரணை தொடர்ந்தது.
கர்நாடகத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்காகக் தான் இந்த தடா கைதிகளை விடுவிக்க முடிவு செய்ததாககர்நாடக அரசின் வழக்கறிஞர் சால்வே நீதிமன்றத்தில் கூறினார். இது தொடர்பாக ஒரு விளக்க மனுவையும் தாக்கல்செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் பரூச்சா, மெகோபாத்ரா, சபர்வால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கர்நாடகத்துக்கு பலகேள்விகளை எழுப்பினர். எதற்காக தடா கைதிகள் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறீர்கள் என்ற முழு விவரத்தைதடா நீதிமன்றத்தில் கர்நாடக அரசு முழுமையாக விளக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.
கர்நாடக வழக்கறிஞர் சால்வே கூறுகையில், 72 வயதான ராஜ்குமாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் தான்தடா கைதிகளை விடுவிக்க அரசு முடிவு செய்தது. ராஜ்குமாரை மீட்காமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்இவர்களை விடுவிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைவிடக் குறைவு தான் என்றார்.
அப்போது இடை மறித்துப் பேசிய நீதிபதி பரூச்சா, இந்த தடா கைதிகளை விடுவித்தால், வீரப்பன் ராஜ்குமாரைவிடுவித்துவிடுவான் என்பது என்ன நிச்சயம். அவன் விடுதலை செய்வான் என்பதற்கு ஆதாரம் ஏதாவதுஇருக்கிறதா என்றார்.
அதற்கு பதிலளித்த சால்வே, மாநில அரசிடம் பேசிவிட்டு இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதில் தருகிறேன்என்றார்.
முன்னதாக விவாதத்தைத் துவக்கிய சால்வே, வீரப்பனின் பல கோரிக்கைகளும் அரசியல்ரீதியிலானவை. கர்நாடகமக்களை எரிச்சல் படுத்தவும் கர்நாடக அரசை தொல்லைக்குள்ளாவாக்குவதும் தான் வீரப்பனின் நோக்கம்.வீரப்பனை பிடிப்பது என்பது மிக சிரமமான விஷயம். 18,000 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில்அவன் இயங்கி வருகிறான். காட்டுப் பகுதியில் உள்ள மக்களும் வீரப்பனை ஆதரித்து வருகின்றனர் என்றார்.
நீதிபதி பரூச்சா இடை மறித்துக் கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் கர்நாடகமும், தமிழக அரசும்அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடா கைதிகளை விடுவிப்பதில் மட்டுமே அக்கரையாகஉள்ளன என்றார்.
இந்த விவாதத்துக்குப் பின் விசாரணை மீண்டும் நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications