சட்டசபைத் தேர்தல்: 50 இடங்கள் வேண்டும் என்கிறது பா.ஜ.க.
சென்னை:
ஜாதிக் கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கட்சி முக்கியத்துவம் கொடுக்காது. வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் ஐம்பது இடங்களில்பா.ஜ.க போட்டியிடும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் கிருபாநிதி நிருபர்களிடம் கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய டாக்டர் கிருபாநிதி, பா.ஜ.கவின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும் வகையில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட பா.ஜ.க. தயாராக உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது தேர்தலில் அதிக எம்.எல்.ஏக்களை பா.ஜ.க பெறும்.தமிழகத்தில் பா.ஜ.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்துள்ளது.
மூன்று லட்சம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்ந்துள்ளது. பிற கட்சியை சேர்ந்தவர்களும் பா.ஜ.கவில் இணைவதில்ஆர்வமாக உள்ளனர்.
ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் தி.மு.க அரசின் செயல்பாடு சரியான பாதையில்தான் செல்கிறது. அவரை உயிருடன் மீட்கவேண்டும். தீவிரவாதத்தை பா.ஜ.க ஒரு போதும் ஆதரிக்காது. முதல் கட்டம் ராஜ்குமார் மீட்பு. அடுத்த கட்டம் தான் வேறுநடவடிக்கைகள்.
ராமதாஸ் - வாழப்பாடி மோதலால் கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. மம்தா பானர்ஜி அரசியல்வாதி. அதனால்அவருக்கு பிரச்சனைகளின் உண்மை நிலை தெரியும். ஆனாலும், தனது மாநில மக்களை திருப்திபடுத்துவதற்காககோரிக்கைகளை வைக்கிறார்.
இதனால் கூட்டணிக்கு பிரச்சனை இல்லை.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் அந்தஸ்து கேட்டு வற்புறுத்தப்படும். வரும் தேர்தலில் பா.ஜ.க. ஐம்பது இடங்களைக் கோரும்.கூட்டணியில் பேசி முடிவு செய்து போட்டியிடுவோம்.
இவ்வாறு கிருபாநிதி கூறினார். பேட்டியின் பொழுது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications