இனி, இன்டர்நெட் மூலம் குறைகளைத் தீர்க்கும் மின் வாரியம்
சென்னை:
இணையத்தின் (இன்டர்நெட்) மூலம் மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் புதிய திட்டம்ஒன்றை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ளது.
இது குறித்து மின்வாரியம் சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
மக்களுக்கு எளிய முறையிலும் விரைவாகவும் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றதமிழ் நாடு அரசின் கொள்கைக்கு ஏற்ப தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தின்மூலம் மின் நுகர்வோர் புகார்களைப் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்துஇணையத்தின் மூலமாகவே பதில் அளிக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் மின் நுகர்வோர்கள் இணையத்தின் மூலம் எந்நேரத்திலும்எவ்விடத்திலிருந்தும் தங்களுடைய புகார்களை மின்சார வாரியத்திற்கு அனுப்பலாம்.
மின் நுகர்வோர்கள் இணையத்தின் மூலம் எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும்தங்களுடைய புகார்களைப் பதிவு செய்ய தகுந்தாற்போல் இந்த மென்பொருள்உருவாக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர்கள் இணையத்தில் உள்ள மின்வாரியத்திற்கென்று உரிய இணையத்தளமான www.tneb.org மூலமாக தங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.
மின் நுகர்வோர்கள் கணினி மூலம் மேற்கூறிய இணைய தளத்திற்கு செல்லும்போதுபுகார்களைப் பதிவு செய்வதற்கான படிவம் தோன்றும். படிவத்தை நிறைவு செய்துஅனுப்புவதற்கான ஆணையை கணினி மூலம் இட்ட பிறகு அப்புகார் தலைமை மக்கள்தொடர்பு அலுவலருக்கு வந்து சேரும்.
அவர்வருக்கென்று உரிய இணைய பக்கத்திற்குச் சென்று பார்க்கும் போது மின்நுகர்வோர் கொடுத்த புகார் படிவம் தோன்றும். புகாரை உரிய மேற்பார்வைப்பொறியாளர் மின் பகிர்மான வட்டத்திற்கு அனுப்பி வைப்பார்.
மேற்பார்வைப் பொறியாளர் அவருக்கென்று உரிய இணைய பக்கத்திற்குச் சென்றுபார்க்கும் போது மேற்படி புகார் படிவம் தோன்றும். மேற்பார்வைப் பொறியாளர்அப்புகார் மீது உரியநடவடிக்கை எடுத்த பின்பு தன்னுடைய பதிலை இணையத்தின்மூலமாக தலைமை மக்கள் தொடர்பு அலுவலருக்கு அனுப்பி வைப்பார்.
இதை மின்னஞ்சல் முகவரி உள்ள மின் நுகர்வோர்களுக்கு இணையத்தின்மூலமாகவும், மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு தபால் மூலமாகவும் பதில்அனுப்பி வைப்பார்.
தமிழக அரசின் மின்னணு ஆட்சி முறை (ஈ-கவர்னென்ஸ்) செயல் திட்டத்திற்கு இந்ததிட்டம் ஒரு முன்னோடியாக அமையும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.