என்.ஆர்.ஐகளிடமிருந்து 5 பில்லியன் டாலர் திரட்ட ஸ்டேட் வங்கி திட்டம்
மும்பை:
பாரத ஸ்டேட் வங்கி இந்தியன் மில்லினியம் டெபாசிட் என்ற பெயரில் அயல் நாட்டுஇந்தியர்களிடமிருந்து (என்.ஆர்.ஐ.)நிதி திரட்டுகிறது. தனது நிதி நிலைமையை பலப்படுத்திகொள்ளும் முயற்சியாக இந்த நிதியைத் திரட்டுகிறது.
இந்தியாவில் உள்ள பெரிய வங்கிகளிலேயே மிகப் பெரியது பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கிஅக்டோபர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி இந்தியன் மில்லினியம் டெபாசிட் என்றபெயரில் 10 நாட்களுக்கு வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து நிதி திரட்டுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 5 பில்லியன் டாலர் அளவுக்கு டெபாசிட்பெற முடியும் என நம்பிக்கைதெரிவிக்கிறது வங்கி.
இந்த திட்டத்தில் டாலர்கள் மூலம் பங்குகள் வாங்குபவர்களுக்கு 8.5 சதவீத வட்டியும், பவுண்ட்கள்மூலம் பங்குகளை வாங்குவோருக்கு 7.85 சதவீத வட்டியும், யூரோ காயினுக்கு 6.85 சதவிகிதவட்டியும் வழங்கப்படும். இந்த திட்டதின் கீழ் செலுத்தப்படும் பணத்திற்கான வட்டி ஆறு மாதத்திற்குஒரு முறை வழங்கப்படும் அல்லது மொத்தமாக டெபாசிட் காலமான 5 ஆண்டு காலம் முடியும்போது வாங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் தனியாகவோ அல்லது அயல் நாட்டில் வாழும்வேறு ஒரு இந்தியருடனோ இணைந்து பணம் சேலுத்தலாம். அல்லது இந்தியாவில் வாழும்இந்தியரை இரண்டாவது பெயராக கொண்டும் பணம் செலுத்தலாம். இந்த வைப்பு நிதிப் பத்திரத்தைஇந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு பரிசாக வழங்கலாம்.
இந்த திட்டத்தின் முலம் பெறும் வட்டிக்கு வருமான வரி மற்றும் சொத்து வரியிலிருந்து விலக்குஅளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெறும்பத்திரத்தின் காலம் 5 ஆண்டுகள்.ஆனால் வாடிக்கையாளர் விரும்பினால் குறிப்பிட்ட காலம் முடியும்முன்னரே கணக்கை முடித்துக் கொண்டு பணத்தை பெற முடியும்.இதற்கு எந்த விதமான அபராதத்தொகையும் வசூலிக்கப்பட மாட்டாது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் பணம் பொருளாதார சீரமைப்புக்காக செலவிடப்படும். பாரதஸ்டேட் வங்கி பொருளாதார சீரமைப்புப் பணிகளை துவக்கி செயல்பட்டு வருகிறது என வங்கியின்அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.