நாளை கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு
சென்னை:
பரபரப்பான சூழ்நிலையில் அதி.மு,க. பொதுக்குழு 24-ம் தேதி சென்னையில்கூடுகிறது.
கடந்த 6 மாதத்தில் 65 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், சசிகலாவுக்கு பொதுக்குழுஉறுப்பினர் பதவி என்று அதிரடியாக தாம் எடுத்த நடவடிக்கைகளுக்குபொதுக்குழுவில் ஒப்புதல் பெறுகிறார் ஜெயலலிதா.
பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய் கிழமை வடபழனி விஜயசேஷ மகாலில்நடைபெறுகிறது. அவைத் தலைவர் காளிமுத்து தலைமை வகிக்கிறார். ஜெயலலிதாசிறப்புரை ஆற்றுகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்றசூழ்நிலையில் நடைபெறுகிற பொதுக்குழு கூட்டமாக இது இருப்பதால் முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பலதரப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களையும் திறந்த மனதுடன் பேச அனுமதித்து,அவர்களின் கருத்தை அறிய ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது உடன் பிறவா உயிர்த் தோழி சசிகலாவுக்கு பொதுக்குழு உறுப்பினர்பதவி தந்துள்ளார் ஜெயலலிதா. எனவே கட்சிப் பொதுக்குழுவில் அவர் முதல்முறையாக கலந்து கொள்கிறார். அவருக்கு கட்சியில் முக்கிய பதவி தருவது குறித்தும்பொதுக்குழுவில் முடிவெடுக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்ற புதிரான நிலைஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி அடிமட்டத் தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அந்த நிலையை போக்க அடிமட்டத் தொண்டர்களின் அபிமானத்தை பெற்ற மாஜிக்கள்சிலருக்கு மீண்டும் மரியாதை அளிக்க ஜெயலலிதா தீர்மானித்துள்ளார்.
கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் கடந்த 6 மாதத்தில் 65 மாவட்டச்செயலாளர்களை மாற்றியுள்ளார் ஜெயலலிதா. இவர்களில் 30 பேர் தேர்தல் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
இவர்களை மாற்றியதற்கு ஜெயலலிதா பொதுக்குழுவின் ஒப்புதலை பெற்றாகவேண்டும். அதோடு கட்சியில் இந்த அதிரடி நடவடிக்கைகளை தொடர தனக்குஅதிகாரம் அளிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications