For Daily Alerts
Just In
பெட்ரோல் விலை உயர்வு .. ஏ.ஐ.டி.யு.சி. போராட்டம்
சென்னை:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, போராட்டம் நடத்த முயன்ற 300 க்கும் மேற்பட்ட, அகில இந்திய வர்த்தக காங்கிஸ்தொண்டர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னையில் ஏஐடியுசி தமிழக பிரிவு தலைவர் தியாகராஜன் தலைமையில் தொண்டர்கள் பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வைக் கண்டித்துப்போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது தலைவர் உள்பட அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரையில் வருமானவரித் துறை அலுவலகம் மற்றும் தலைமைத் தபால் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்த முயன்றது தொடர்பாக250 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ
Comments
Story first published: Tuesday, October 31, 2000, 5:30 [IST]