வீரப்பன் கூப்பிட்டால் போவோம் .. நெடுமாறன்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக வீரப்பனிடமிருந்து தகவல் வந்த பிறகு காட்டுக்குச்செல்வோம் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருக்கும் பிரபல கன்னட நடிகரை மீட்கும் முயற்சியில் அரசு தூதர் நக்கீரன்கோபால் மற்றும் நெடுமாறன் உள்ளிட்ட நான்கு பேர் வீரப்பனுடன் பேச்சு வார்த்தைநடத்தி வருகின்றனர்.
நெடுமாறன் தற்போது காட்டுக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும்,வீரப்பனிடமிருந்து தகவல் வந்ததும் காட்டுக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதலவர் கிருஷ்ணாவைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். திங்கள் கிழமை தமிழகமுதல்வருடன் தொலைபேசி மூலம் பேசியாதகவும், அவர் மத்திய அமைச்சர் மாறன்உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்புதெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications