சமயத்தின் சாபக்கேடுகள் போலிச் சாமியார்கள் ..
சென்னை:
சமயத்திற்கே சாபக்கேடுகளாக விளங்குபவர்கள் போலிச் சாமியார்கள் என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்றார்.
திமுகவில் இருந்தாலும் பழுத்த ஆன்மீகவாதியாக வாழ்பவர் பழனிவேல்ராஜன். கட்சியின் கடவுள் மறுப்புக் கொள்கையை புறந்தள்ளி விட்டு நெற்றிநிறைய விபூதி, குங்குமத்துடன் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தை நடத்துபவர்.
திமுகவில் சமயப் பற்றுள்ள பலரை கடுமையாக விமர்சித்துள்ள கருணாநிதி, பழனிவேல்ராஜன் விஷயத்தில் மட்டும் கண்டு கொள்வதில்லை. இதனால்கோவில் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார் பழனிவேல்ராஜன்.
பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவும், திருப்பணிக்குழுத் தலைவர் மகாலிங்கத்திற்கு பாராட்டு விழாவும்நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் பழனிவேல்ராஜன் பேசுகையில், நம்நாட்டில் போலிச் சாமியார்களின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.இதனால் நமது சமயத்திற்கே இவர்கள் ஒரு சாபக்கேடாக விளங்குகிறார்கள்.
அண்ணா முதல்வரவாக இருந்தபோது அவரது நண்பர் ஒருவர் நாத்திகராக இருந்தார். அவர் மதுரையை சேர்ந்தவர். அவரை பழநி கோவிலுக்குஅறங்காவலர் குழுவில் அண்ணா நியமித்தார். நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவே மாறி விட்டார். ஆத்திகம், நாத்திகம் அவரவர் மனதைப்பொறுத்தது. ஆத்திகத்தின் கடைசி எல்லை தான் நாத்திகம் என்று நமது சித்தாந்தம் கூறுகிறது என்றார் அவர்.
முன்னதாக எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் பேசுகையில், இறைவனின் திருப்புகழைப் பாட பொன்னோ, பொருளோ தேவையில்லை.இனிமையான சொற்களே போதும் என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். மனிதனால் கண்டுபிடிக்க முடியாத இடத்தில்கடவுள் உள்ளார். அதேபோல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாதது தான் கடவுள் என்றார்.












Click it and Unblock the Notifications