உ.பி.யில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுகள் ஊடுறுவலா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ:

பிரபல அரசியல் தலைவர்களைக் கொல்வதற்காக விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர் உத்திரப் பிரதேச மாநிலத்துக்குள் ஊடுருவியிருப்பதாக அம் மாநிலஅரசுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலிகளின் தற்கொலைப் படையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர்மாநிலத்துக்குள் ஊடுருவியிருப்பதாக உளவுப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, மாநிலத்தில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், குறிப்பாகஅரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் உ.பி. மாநில அரசைமத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் தலைவர்களை தற்கொலைப் படையினர் கொல்ல புலிகள் சதித் திட்டம்தீட்டியுள்ளபோதிலும், எந்த அரசியல் தலைவர்களை அவர்கள் குறி வைத்துள்ளனர்என்பது தெரியவில்லை என்று உ.பி. அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள எச்சரிக்கைதகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைப் படையைச் சேர்ந்த ஜீவா மற்றும் சீலன் ஆகியோர் மூலம் இச் சதித்திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும் பணியை ஹாங்காங்கில் உள்ள ராதா என்ற நபர்மேற்கொண்டுள்ளதாக உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஜீவா பிரான்ஸிலும், சீலன் பாங்காக்கிலும் உள்ளனர். சதித் திட்டத்தைநிறைவேற்றி முடித்தவுடன் தனித்தனியாக சென்னைக்கு வந்து சேரும்படி ஜீவாவுக்கும்,சீலனுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஜீவா பிரான்ஸ் நாட்டு பாஸ்போர்டும், சீலன் இந்திய பாஸ்போர்டும்வைத்திருப்பார்கள். இவற்றைத் தவிர ஜீவா மற்றும் சீலன் இருவரைப் பற்றி வேறுதகவல்கள் ஏதும் இல்லை. அவர்களுடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை.

ஆகவே, மாநில அரசு அதிக கவனத்துடன் செயல்படவேண்டும். அரசியல்தலைவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்ற உத்திரப் பிரதேசஅரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+