இலங்கை சண்டையில் 11 விடுதலைப் புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கை, கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் நடந்த கடும் மோதலில் 11 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். எட்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
கிழக்கு அம்பாரை மாவட்டம் அக்கரைப்பட்டு என்ற பகுதியில் உள்ள பழங்காடி என்றஇடத்தில், நடந்த சண்டையில் ராணுவ வீரர்களும், விடுதலைப் புலிகளும் கடுமையாகமோதினர்.
இந்த சண்டையில், 2 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோதுமேலும் 6 விடுதலைப் புலிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ராணுவச் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மடுவில், சரசாலை, நாகர்கோவில்ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை முழுவதும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 3 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சண்டையில் எட்டு ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications