நாகப்பா கூறுவதில் உண்மையில்லை .. கூறுகிறார் கர்நாடக டி.ஜி.பி
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்துள்ள நாகப்பா கூறுவதில் பெரும்பாலான தகவல்கள் உண்மையில்லை என்று கர்நாடக டி.ஜி.பி.தினகர் சனிக்கிழமைகூறினார்.
சனிக்கிழமை மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாகப்பா தப்பித்து வந்தது குறித்து சென்னை போலீஸாருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாகப்பா கூறிய தகவல்கள் பெரும்பாலும் முன்னுக்குப்பின்முரணாக இருப்பதாகத் தெரிய வந்தது.
நாகப்பா கூறுகையில், தான் காட்டிலிருந்து தப்பித்து வந்த போது வீரப்பனின் ஆளையும், வீரப்பனையும் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதுதவிர 8 மணிநேரம் காட்டிலிருந்து நடந்து பண்ணாரிக்கு வந்து அங்கு ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு காஜனூருக்கு பஸ்சில் வந்ததாகக் கூறியுள்ளார்.
வீரப்பனும், அவனது கூட்டாளிகளின் இருப்பிடங்கள் பற்றி நாகப்பா கூறியது, சொல்வதற்கு தகுதியில்லாதவை. நாகப்பாவுக்கு பாதுகாப்பு தரபோலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் தினகர்.