For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளங்கோவன் - காளிமுத்து "சண்டை மீண்டும் துவங்கியது!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து மீண்டும் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதுதாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காளிமுத்து கூறியுள்ளதாவது:

வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாமிகச் சரியாகச் செயல்படுகிறார் என்று ஜெயலலிதா கூறியதாக இளங்கோவன் கூறியுள்ளார்.

எங்கள் தலைவி ஜெயலலிதா அப்படி எதுவும் கூறவில்லை. இம்மாதிரி அறிக்கை வெளியிடுவதை இளங்கோவன்தவிர்த்திருக்க வேண்டும்.

வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக, தமிழக முதல்வர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றுதான் ஜெயலலிதா கூறிவருகிறார். மேலும் ஒரு முறை வீரப்பன் விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி எதுவும் நடக்காதது போல்,அலட்சியமாக நடந்து கொள்கிறார். ஆனால் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவோ அதிர்ச்சி அடைந்தநிலையில் இருக்கிறார்.

வீரப்பன் விவகாரம் ஒரு பிரச்சனை என்றே கருதாமல் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்கிறார் கருணாநிதி.இதிலிருந்தே இந்தக் கடத்தல் நாடகம் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதே என்றுதான் ஜெயலலிதா கூறினார்.

ஆனால், இளங்கோவனோ எதிர்மறையாக அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். பேச்சு சுதந்திரம் இருக்கிறதுஎன்பதற்காக அவர் தாறுமாறாக அறிக்கை வெளியிடக் கூடாது என்று காளிமுத்து எச்சரித்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X