கடன் தொல்லை: காஞ்சீபுரத்தில் 4 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சீபுரம்:
கடன் தொல்லை அதிகரித்ததால் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடைஉரிமையாளர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சீபுரம், மறைமலைநகர் சிங்கம்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்(45). இவர் பலசரக்குக் கடை நடத்தி வந்தார். சிட்பண்ட் தொழிலையும் செய்துவந்தார்.
ஜலாலுதீனுக்கு சிட்பண்ட் மூலம் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அதிகஅளவில் கடன் வாங்கியிருந்தார். கடன் சுமை அதிகமானதால் அதைத் திருப்பிசெலுத்துவது அவருக்கு பெரும் மலைப்பாக இருந்தது.
இதையடுத்து ஜலாலுதீன், அவரது மனைவி, 13 மற்றும் 8 வயதாகும் மகள்கள்ஆகியோர் சனிக்கிழமை இரவு வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டனர்.
நான்கு பேருடைய உடல்களும் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications