மொரீஷியஸுக்கு வள்ளுவர் சிலை வழங்குகிறது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:தமிழக அரசு சார்பில் மொரீஷியஸ் நாட்டுக்கு வெண்கலத்தால் ஆன திருவள்ளுவர் சிலைவழங்கப்படவுள்ளது.
ரூ. 3 லட்சம் செலவில் இந்த வள்ளுவர் சிலை தயாரிக்கப்படவுள்ளது. திருவள்ளுவர் சிலை தயாரித்துதருமாறு மொரீஷியஸ் அரசு சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதை ஏற்றுதிருவள்ளுவர் சிலையை தமிழக அரசு வழங்குகிறது.
தமிழக அரசு வழங்கும் வள்ளுவர் சிலை 5.5 அடி உயரம் கொண்டது. சிற்பி ஜெகன்னாதன் இந்தசிலையை வடித்து வருகிறார். நவம்பர் மாதம் சிலை வடிவமைப்புப் பணிகள் முடிவடையும்.
மாநில செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முல்லைவேந்தன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications