"மத்திய அமைச்சர்கள் பிரதமரை மதிப்பதில்லை
பாண்டிச்சேரி:
மத்திய அமைச்சர்கள் யாரும் பிரதமரை மதிப்பதில்லை என்று பாண்டிச்சேரி முதல்வர்ப.சண்முகம் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில்அவர் பேசுகையில், மத்திய அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லை. சமீபத்தில் ஆறு புதியஅமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
உடனேயே, ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியும், அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சாவும்ராஜினாமா செய்து விட்டனர். பிற அமைச்சர்களும் பிரதமர் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இல்லை.
பெட்ரோல் விலை உயர்வு நியாயமில்லாதது. பல மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபைத்தேர்தல் நடந்ததால் பெட்ரோல் விலையை உயர்த்துவது தாமதமாகியுள்ளது.இல்லாவிட்டால் முன்பே உயர்த்திருப்பார்கள்.
பாண்டிச்சேரியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அனைத்துமதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்றார்சண்முகம்.












Click it and Unblock the Notifications