For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

45 ஆண்டுகளில் சீனாவை மிஞ்சும் இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இன்னும் 45 ஆண்டுகளில்இந்தியா உருவாகும் என்று மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த்கூறியுள்ளார்.

தேசிய மக்கள் தொகை கமிஷனின் தலைவராகவும் இருக்கும் பந்த், தேசிய மக்கள்தொகைத் திட்டம்-2000 என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது:

தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அப்படியே தொடர்ந்தால்,2045-ம்ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும்.

மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மே 11-ம் தேதியுடன் இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியைத்தொட்டது.

மக்கள் தொகை வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்று கூற முடியாது. தடுக்கப்படக்கூடியதுதான் இது.

சிசுவதை, பெண்களின் நிலைமை, பால் வேறுபாடு ஆகியவையும் கூட மக்கள் தொகைவளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்மட்டும் இந்தியாவின் 45 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இது 2016-ம் ஆண்டின்இறுதியில் 55 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மக்கள் தொகை 1.7 கோடி அதிகரிக்கிறது. 30கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிக்கிறார்கள். இது மன்னிக்கவேமுடியாததாகும். வறுமையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X