கிணற்றிலிருந்து 2 பஞ்சலோக சிலைகள் மீட்பு
சென்னை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 பஞ்சலோக சிலைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு சின்னப்பாண்டிஎன்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் காணாமல் போன அய்யப்பன் சிலையை, வாடிப்பட்டியிலுள்ள கிணறு ஒன்றில் போட்டிருந்தது தெரிய வந்தது.இதையடுத்துவாடிப்பட்டி கிணற்றிலிருந்து 35 கிலோ எடையுள்ள அய்யப்பன் சிலை மீட்கப்பட்டது.
இதே போல் மதுரை மாவட்டம் வடுகபட்டியைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் பெருமாள்ஆகியோரின் பஞ்சலோக சிலைகளும் திருடப்பட்டன. இவற்றில், பெருமாள் சிலையைத் தவிர பிற விக்கிரகங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.பெருமாள் குறித்துத் தெரியவில்லை.
ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சாமி சிலைகள் இரண்டரை வருடங்களுக்கு முன் திருடப்பட்டது. இரு சிலைகளும் இரண்டரை அடி உயரம் கொண்டவை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications