பிரபாகரன் - நார்வே தூதர் சந்திப்பு: இலங்கை அரசு கருத்து

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நார்வே தூதரை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பேச்சு வார்த்தைநடத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மத்தியஸ்த முயற்சியில்ஈடுபட்டுள்ள நார்வே அரசின் விசேஷ தூதர் எரிக் சொல்ஹீம் சில தினங்களுக்கு முன்காட்டுக்குச் சென்று பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து தற்போது இலங்கை அரசு கருத்துத் தெரிவித்துள்ளது. அதில், நார்வேதூதரை, நாங்கள் பேச்சுவார்த்தைக்காக அனுப்பவில்லை என்று இலங்கை அரசுகூறியுள்ளது.

அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எரிக் தலைமையிலான நார்வே குழுபிரபாகரனுடன் பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசுக்காக இந்தபேச்சுவார்த்தை நடக்கவில்லை.

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாலவள்ளிபகுதிக்குச் செல்ல நார்வே குழுவினர் அனுமதி பெற்றே சென்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த செய்தியும், நார்வே குழுமூலம் கொடுத்து அனுப்பப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+