For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தமிழ் இந்திய ஆட்சி மொழியாக வேண்டும்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

தமிழை இந்திய ஆட்சி மொழியாக ஆக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் எனதமிழக பெருவிழாவில் தீர்மானம் நிறைவேற்றபப்ட்டது.

தமிழக சான்றோர் பேரவையின் சார்பில் தமிழக பெருவிழா நெல்லை கொக்கிரக்குளம்ரோஸ் மகால் திருமண மண்டபத்தில் 2 நாள் நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவுக்கு தமிழ் சான்றோர் பேரவை நிறுவனகர் அருணாசலம்தலைமைை தாங்கினார்.

விழாவில் தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் பரந்தாமன், தமிழ் தேசபொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத் தலைவர் செந்தில் நாதன், பேராசிரியர் பெரியார் தாசன் ஆகியோர்பேசினர். தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழண்ணல் நிறைவுரைநிகழ்த்தினார்.

தமிழை இந்திய மொழியாக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், மத்திய அரசுதமிழை செவ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கான உரிய அரசுஆணையினை வழங்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்க மத்திய மாநில அரசுள் முயற்சி மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில்வரவிருக்கும் கல்வி ஆண்டுமுதல் மருத்துவம், தொழில்நுட்ப கல்லூரி கல்வியைதமிழில் கற்பிக்க வேண்டும் என்பது உள்ளட்ட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X