எப்போது காட்டுக்குச் செல்லும் தூதுக்குழு?
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து விடுவிப்பது கு றித்து பேச்சு வார்த்தை நடத்ததூதுக்குழுவினர் சனிக்கிழமை காட்டுக்குச் செல்வார்கள் என கூறப்படுகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க அரது தூதர் கோபாலுடன் தமிழக தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறனும் சென்றிருந்தார்.
அவரை கடுமையாக தாக்கி சட்டசபையில் எதிர்ட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.இதனால் தான்மீண்டும் காட்டுக்கு போகப் போவதில்லை என நெடுமாறன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
ராஜ்குமாரின் மகன்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், கர்நாடக தரப்பினரும் நேரில் நெடுமாறனை சந்தித்துகேட்டுக் கொண்ட பின் நெடுமாறன் தன் முடிவை மாற்றிக் கொண்டார் என தெரிகிறது.
இதனால் தூதுக் குழுவினர் சனிக்க்கிழமையன்று வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த சனிக்கிழமை காட்டுக்குசெல்லலாம் எனவும், இது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமையன்று வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications