மாணவியை கற்பழிக்க முயற்சி: ஆசிரியர்கள் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிளஸ் 2 மாணவியை கற்பழிக்க முயற்சித்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை அருகே கீழ்பென்னாத்தூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1800 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ் டூ மாணவிகள் மட்டும் 300 பேர் உள்ளனர்.

சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் தாவரவியல் வகுப்பு நடந்தது. வகுப்பு முடிந்ததும்கடைசியாக வகுப்பில் இருந்து வெளியேறச் சென்ற ஒரு மாணவியை, அங்கு வந்த கணித ஆசிரியர் ஜெயச்சந்திரன்தடுத்து நிறுத்தினார். கொஞ்ச நேரம் கழித்துப் போ என்று கூறினார்.

அதற்கு அந்த மாணவி அடுத்த பீரியட் தொடங்கி விடும் என்று கூறியிருக்கிறார். நான் தானே அடுத்த பீரியட்பாடம் எடுக்க வேண்டும் என்றார். அப்போது அங்கு தாவரவியல் ஆசிரியர் தேவதாஸ் என்பவர் வந்தார்.

இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைக் கேட்ட அவரும், அம்மாணவியை சொன்னபடி செய் என்றார்.அதைக் கேட்ட மாணவி உள்ளே போய் உட்கார்ந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆசிரியர் ஜெயச்சந்திரன்அம்மாணவியிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார்.

பயந்து போன மாணவி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அப்போது மற்றொரு ஆசிரியர்தேவதாஸ் தடுத்து நிறுத்தியுள்ளார்.

உடனடியாகப் பள்ளியை விட்டு வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி பெற்றோரிடம் விஷயத்தை சொன்னார். கிராமமக்கள் கொதித்தெழுந்தனர். அனைத்துக் கட்சியும் ஆதரவு தெரிவிக்க கூட்டமாக பள்ளி முன்பு கூடினர். மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.

தகவல் தெரிந்து போலீஸ் அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் விரைந்து வந்தனர். உடனடியாக மாணவியிடம்தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+