அதிமுக வுடன் நட்பா? மறுக்கிறார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சி அ.தி.மு.க.வுடன் நட்பு கொண்டுள்ளது என வரும் செய்திகள் கற்பனை செய்திகள்என்றார்.
பாண்டிச்சேரியில் நிருபர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
எங்கள் கட்சியின் தேர்தல் திட்டங்கள் பற்றியும் கூட்டணி பற்றியும் இப்போது கூறுவது இயலாது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில்உள்ள கூட்டணியே அடுத்த அரசை அமைக்கும்.
வரவிருக்கும் தேர்தல் பணிகளை கவனிக்க நான் இம்மாதமும் அடுத்த மாதமும் பாண்டிச்சேரியில் இருப்பேன்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் மீண்டும் காட்டுக்குச் சென்று ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டேன்.
தேசிய முண்ணனி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்ணாண்டசுடனும் ராஜ்குமார் விடுதலை குறித்து சென்னையில் பேசினேன்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு தர வேண்டிய சலுகைகள் குறித்து 7 மாதங்களுக்கு முன் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை மீது எந்த விதமானநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு உயர் கல்வியில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கப்படாமல் இருக்கிறது இதுமிகவும் வருநத்தக்கது.
போலீஸ் கான்ஸ்டபிள்களின் சம்பளம் டெல்லியில் பணிபுரியும் கான்ஸ்டபிள்களுக்கு கொடுப்பது போல் கொடுக்கப்பட வேண்டும்.
அரசு பணிகளில் புதிதாக எவரையும் பணியில் அமர்த்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தவறு. அந்த தடையை நீக்க முதல்வர் சண்முகம் உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.