For Daily Alerts
Just In
ஏர் இந்தியாவை வாங்க போட்டி அதிகரிக்கிறது
டெல்லி:
ஏர்-இந்தியாவை வாங்க மேலும் 2 நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
இந்தியாவின் சர்வதேச விமான நிறுவனமான ஏர்-இந்தியாவின் 40 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதை வாங்க டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. அதே போலஎமிரேட்ஸ் ஏர்லைன்சும் இந்தப் பங்குகளை வாங்க முன் வந்தது.
ஏர்-இந்தியாவை தனியாருக்கு விற்கக் கூடாது. இதை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என விமானிகள் சங்கமும் டெண்டர்தாக்கல் செய்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி நிதி நிறுவனம் இவர்களுக்கு கடன் வழங்க முன்வந்துள்ளது.
இந் நிலையில் ஏர் பிரான்ஸ்- டெல்டா நிறுவனம் ஆகியவையும், ஹிந்துஜா நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க இப்போதுடெண்டர் தாக்கல் செய்துள்ளன.
ஏர்-இந்தியாவை வாங்க 2 நிறுவனங்கள் போட்டி
Comments
Story first published: Saturday, November 11, 2000, 5:30 [IST]