நாளை அகில இந்திய காங். தலைவர் தேர்தல்
டெல்லி:
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 800 பேர் டெல்லியில் நடக்கும் தேர்தலில் கலந்து கொள்வார்கள். இவர்கள்காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்வார்கள்.
நவம்பர் 12 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறஇருக்கிறது.
தலைவர் பதவிக்கு சோனியா காந்தியும், உத்தரப்பிரதேச முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிதேந்திரபிரசாத்தும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தை எதிர்த்து, இன்னொருவர்போட்டியிடுவது இதுவே முதல்முறை.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிலிருந்து வாபஸ் பெற மாட்டேன் என்று ஜிதேந்திரப்பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியை எதிர்த்துப், போட்டியிடும் ஜிதேந்திரப்பிரசாத் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.
காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனதுநோக்கமாகும். சோனியா காந்தியை எதிர்க்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல.
மக்களிடையே பாரதிய ஜனதாக் கட்சி வலுவிழந்த நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தனது நிலையைப் பலப்படுத்திஆட்சியைப் பிடித்து விடலாம்.
காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். இதனால்தான் தலைவர் போட்டியில் மனுத் தாக்கல்செய்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லாரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் கட்சியைப் புதுப்பிக்க வேண்டுகிறார்கள். அந்தரீதியில்தான் நான் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறேன்.
ஆரம்பத்திலிருந்தே நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியிலிருந்து போய்விட்டு மீண்டும் கட்சியில்சேர்ந்தவன் அல்ல. கட்சியில் கடுமையான மாற்றம் தேவைப்படுகிறது. அதனால் அகில இந்தியத் தலைவர்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் ஜிதேந்திர பிரசாத்.