தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க எதிர்க்கட்சி கோரிக்கை
கொழும்பு:
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது பற்றிபாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விஷயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரனில் விக்கிரமசிங்கே கூறுகையில், பல ஆண்டுகளாக நடை பெற்று வரும் இனப் பிரச்சனையைத்தீர்க்க சிறுபான்மையினர் அதிகம் வாழும் வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரமும், சுயாட்சியும் வழங்கப்படுவதற்கு புத்த பிட்சுகள் ஆதரவுஅளிக்க வேண்டும்.
பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர புலிகளுடன் பேச்சு வாரத்தை நடத்தப்படும் எனவும் அதிபர் சந்திரிகா பாராளுமன்றத்தில் கூறினார்.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் தாக்கல் செய்த அரசியல் சட்டத்திற்கு புலிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. பல தமிழ் கட்சிகளும் கண்டனம்தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளிடம் சந்திரிகா பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் விதத்தில்பாராளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
சந்திரிகா அறிவித்த திட்டங்களில் தெளிவான, உறுதியான திட்டங்கள் இல்லை. வடகிழக்கு மாகாணம் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் குறித்துஅனைத்துக் கட்சியினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும் பாராளுமன்றத்திலும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கூறினார் அவர்.












Click it and Unblock the Notifications