லெபனானில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாமே (லெபனான்):

லெபனான் பெய்ரட் பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடம் சனிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவஇடத்திலேயே இறந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலங்களை வெளியே எடுத்தனர். காயமடைந்தஅனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு 5 வருடங்கள்தான் ஆகின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்றும்அஞ்சப்படுகிறது.

அதிகாலை 3.50 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்த போது, அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த மாநகராட்சிஊழியர்கள், இது சாதாரண விபத்தாக இருக்கக் கூடும் என்று அப்பகுதிக்குச் செல்லாமல் இருந்து விட்டனர்.

இந்தக் கட்டிடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கட்டிடம் ஒன்றில் வசிக்கும் முகமது இட்டானி என்பவர்இதுகுறித்துக் கூறுகையில், நாங்கள் பிறந்தநாள் விழா கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

அப்போது இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு விரைந்தோம். அதற்குள்இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் கூக்குரலிட்டு அழும் சத்தம் கேட்டது என்றார். இச்சம்பவம் குறித்து பெய்ரட்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+