நீதிபதி சுகவீனம் .. தரையிறக்கப்பட்டது விமானம்
சென்னை:
விமானப் பயணத்தின் போது, அதில் பயணம் செய்த நீதிபதிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளவர் நீதிபதி நயினார் சுந்தரம். மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க அவர்,சமீபத்தில் விருதுநகர் சென்றார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நயினார் சுந்தரம் மதுரை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
விமானத்தில் அவருடன், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். விமானம் புறப்பட்ட நேரத்தில் நயினார் சுந்தரத்துக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதனால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே ஆம்புலன்சில்சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.