புலிகளை விரட்டாமல் விட மாட்டோம் .. இலங்கை பிரதமர்
கொழும்பு:
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒழிக்காமல் விட மாட்டோம் என்று பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமநாயகே திங்கள்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் கொழும்பில் விழா ஒன்றில் கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
நார்வே தூதுக்குழு இலங்கை அதிபர் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து அமைதித் தீர்வு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. இந்தச்சூழ்நிலையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. விடுதலைப் புலிகளை முற்றிலுமாகயாழ்ப்பாணத்திலிருந்து அகற்றும் வரை, இலங்கை ராணுவம் அங்கிருந்து விலகாது.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் தங்கள் பலம் குறைவாக இருக்கும்போது மட்டும் சண்டை நிறுத்தம் அறிவித்தார்கள். அதனால் வடகிழக்குப்பகுதிகளில் சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
முன்னதாக, தி ஐலண்ட் என்ற பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், புலிகளை முற்றிலுமாக ஒழிக்கும் வரை, ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டாம்என்று ராணுவத்திற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications